Followers

Followers

Tuesday 25 October 2016

பாஸந்தி..

பாஸந்தி...

தேவையான பொருட்கள்....

பால்............2--லிட்டர்

ஜீனி............200--கிராம்

சிரஞ்சி  தானா......50--கிராம்

( இதுக்கு..தமிழ்  பேரு தெரியல...
     ஹார்ஸ்  க்ராம் னு சொல்லுவாங்கல்ல
    கொள்ளு..... அதுபோல ப்ரௌன் கலருல
     முழு பருப்பா  இருக்கும்)

       எவரெஸ்ட்...மில்க்  மஸாலா  தூள்.......2--ஸ்பூன்..

         இதுலதான்..பாதாம்  பிஸ்தா...ஏலக்கா..
          குங்குமப்பூவு  எல்லாம் கலந்து பொடி பண்ணி
         வச்சிருப்பாங்க...நல்ல  ஃபளேவர்  கொடுக்கும்
        இது கிடைக்காதவங்க 5--- ஏலக்காய  பொடி பண்ணி
        சேர்த்துகிடலாம்...

         செய்முறை......

           வாயகன்ற கனமான கடாயில்
            பாலை ஊற்றி அடுப்பை ஸிம்மில்
            வைத்து  காய்ச்சவும்...மேலாக  ஆடை
            படிய  படிய சிறு கரண்டியால்.பாத்திரத்
             பக்கவாட்டில்  ஒதுக்கவும்.. பால் நன்கு
             கொதிக்கும்போது   ஆடை  வராது... ஸோ..
              அடுப்பை   ஸிம்மிலேயே வைக்கவும்..
                 இப்படி  எல்லா  பாலும்  வற்றி  ஆடை
               சேர  குறைந்தது  இரண்டு மணி நேரமாவது
             ஆகலாம்.இரண்டு லிட்டர் பால்  குறுகி
             அரை லிட்டராக வற்றி விடும்.. அடுப்பை
           அணைத்து விட்டு  ஷுகர்...மில்க் மஸாலா
            தூள்...சிரஞ்சிதானா   சேர்க்கவும்
           
              நல்ல பிங்க்  கலரில் சுவையான சுலபமான
              மில்க்  ஸ்வீட்  தயார்...

Saturday 24 September 2016

த்ரீ..இன்..ஒன்....பார்ட்...2..

தக்காளிக்காய்  ஊறுகாய்....

 தேவையான  பொருட்கள்...

 தக்காளி  காய்கள்........அரைக்கிலோ

 சமையல்   எண்ணை.......250--கிராம்

காரப் பொடி........100-- கிராம்...

பெருங்காயத்தூள்......சிறிதளவு..

 உப்பு........தேவையான அளவு..

 செய் முறை....

அடுப்பில் அடிகனமான கடாயை வைத்து எண்ணையை ஊற்றி சூடு படுத்தவும்...

தக்காளி காய்களை கழுவி சுத்தம் செய்து பொடி  பொடியாக கட்செய்து வைக்கவும்..

 எண்ணை சூடானதும்  ஒரு டீஸ்பூன் கடுகு போட்டு பொரிந்ததும் காய்களைச் சேர்க்கவும்... அடுப்பை சிம்மிலேயே வைக்கவும். தக்காளி சீக்கிரமே வதண்கிவிடும்... பாதி வதங்கினதும்.. காரப் பொடி...பெருங்காயப்பொடி உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.. கார வாசனை போனதும் இறக்கி நன்கு ஆறினதும் பாட்டிலில் போட்டு வைக்கவும்.... ப்ரிஜ்ல வச்சா ஒரு வாரம்...பத்து நாட்களுக்கு நன்றாக இருக்கும்....


தக்காளிக்காய்  சட்னி...

 தேவையான பொருட்கள்...

 தக்காளி காய்கள்........கால் கிலோ.
 (நன்கு கழுவி  சிறு துண்டுகளாக கட்செய்யவும்
.)..
 வெள்ளை எள்ளு........ ஒரு டேபிள்.ஸ்பூன்..
 வற்றல் மிளகாய்.....5---.
 உளுத்தம்பருப்பு.......ஒரு டேபிள் ஸ்பூன்..
சமையல் எண்ணை....  ஒரு குழிக்கரண்டி அளவு..
 தேங்காய்  துருவல்... பாதிமூடி..
 உப்பு....தேவையான அளவு..

 செய்முறை....

அடுப்பில் கனமான கடாய் வைத்து எண்ணை ஊற்றி காய்ந்ததும் உளுத்தம்பருப்பு மிளகாய் போட்டு சிவக்க வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். அதேகடாயில் காய்களைப்போட்டு நன்கு சுருண்டு வரும்படி வதக்கவும். மற்றொரு சின்ன கடாயில் கடாயில் எள்ளை எண்ணை விடாமல் சிவக்க வறுக்கவும்
 ஆறிய பிறகு  எல்லாவற்றையும்  மிக்சியில் சடனி பக்குவத்தில் அரைக்கவும்......

தக்காளிக்காய்  கூட்டு....

தேவையான பொருட்கள்....

பயத்தம்பருப்பு.......200--- கிராம்..
தக்காளி காய்......கால் கிலோ..
 மஞ்சத்தூள்..பெருங்காயத்தூள்.உப்பு...தேவையான அளவு

செய்முறை....
 கடாயில் பயத்தம் பருப்பை வாசனை வரும்படி வறுத்து ரெண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக விடவும்.. பருப்பு முக்கால் பதம் வெந்ததும் கட்செய்து வைத்திருக்கும் தக்காளி காய்களை சேர்க்கவும். மேலாக மஞ்சத்தூள்...பெருங்காயதுதூள் சேர்க்கவும். எல்லாமு சேர்ந்து நன்கு வெந்ததும் கீழே இறக் கி வைக்கவும். ஒருஸ்பூன் தேங்கா எண்ணையில் ஒருடீஸ்பூன்  கடுகு உளுந்து நாலு சிவப்பு மிளகாய் தாளிக்கவும்..

Tuesday 23 August 2016

ஸ்ரீகண்ட்

ஸ்ரீகண்ட்... பெயர்  தமிழ் காரங்களுக்கு புதுமையா தெரியும்.

தேவையான பொருட்கள்..

 புளிப்பில்லாத கெட்டி தயிர்........ அரை லிட்டர்..

 ஷுகர் ( ஜீனி.)... 100-கிராம்..

 ஏலக்காய் பவுடர்...... ஒரு சிட்டிகை...

 செய்முறை.....


கெட்டியான தயிரை சுத்தமான ஒரு வெள்ளைத்
 துணியில் கட்டி தொங்க விடவும்..

 தண்ணீர் வடிந்து தயிர் கெட்டி ஆகணும்..
 அந்த தயிரை சுத்தமான ஒரு பாத்திரத்தில் போட்டு
 100-- கிராம் ஜீனியை மிக்ஸியில்
 பொடித்து தயிரில் சேர்க்கவும். ஏலப்பொடி
 சேர்க்கவும். கீரை கடையும் மரத்தால் ஆன மத்தால
 பத்து நிமிடங்களுக்கு நன்கு அழுத்தி கலைக்கவும்..
 இந்த கலவை மென்மையான பேஸ்டாக ஆகும்
  ஃப்ரிஜ்ஜில் வைத்தால் கொஞ்சம்
 கெட்டியான பேஸ்ட்தானே ஆகும்..
 சப்பாத்தி...பூரிக்கு பெஸ்ட் காம்பினேஷன்
 இந்த ஸ்ரீகண்ட். அடுப்பு வேலையும் கிடையாது..
 சுலபமான சுவையான இனிப்பு ரெடி. எங்க வீட்டு குழந்தைங்க
 கிண்ணத்தில் போட்டு ஸ்பூனால்
 அப்படியே சாப்பிடுவாங்க...

Wednesday 17 August 2016

த்ரீ இன் ஒன்

ஃப்ரெஷ்  லெமன் ஜூஸ்.......
 தேவையான பொருட்கள்....
 நல்ல பழுத்த எலுமிச்சம் பழங்கள்.....25.....
 ஜீனி......கால்  கிலோ...
 உப்பு........ ஒரு   சிட்டிகை..
 இஞ்சி...... ஒரு பெரிய துண்டு...

செய்முறை....
எலுமிச்சம் பழங்களை நன்கு கழுவி சுத்தம் செய்து
 பாதி பாதியாக கட் செய்து கொள்ளவும்......
 வாயகன்ற ஒரு பெரிய ஸ்டீல் பாத்திரத்தில்
  க்ரஷரால்  ஜூஸ் பிழிந்து கொள்ளவும். அதில் ஜீனி உப்பு.....கேரட் துருவியில்
 துருவிய இஞ்சி துருவலையும் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்கவும்..
 ஜினி கரைந்து இஞ்சியின் எஸென்ஸும் கலக்க ஒருநாள் ஆகலாம்..
 மறுநாள் அந்த சிரப்பை டீ வடிகட்டியில் வடிகட்டி
 கண்ணாடி பாட்டிலில் ஊற்றி  காற்று புகாமல் மூடி வைக்கவும்... பரிமாறும் போது
 ஒரு டம்ளர் சிரப்புக்கு 3-- டம்ளர் தண்ணீரு சேர்த்து கலந்து கொடுக்கவும்.
 ஃப்ரெஷ் லெமனு ஜூஸ் ரெடி.. இந்த சிரப்பை  ஃப்ரிஜ்ில் வைத்து பாதுகாக்க வேண்டிய தேவை இல்லை. வெளியே வைத்திருக்கலாம்... மிகவும் ஈஸியான முறையில் தயார் செய்து விடலாம். அடுப்பு வேலையே கிடையாது..
6--- மாதங்கள் வரையிலும் சுவை மாறாமல் இருக்கும்....

பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை தோல்களில் உப்பு  கார ஊறுகாய் தயார் செய்யலாம்.
 எலுமிச்சை தோல்களிலிருந்து கொட்டைகள் நீக்கி பொடி பொடியாக கட் செய்து உப்பு மஞ்ச பொடி சேர்த்து கலந்து பத்து நாட்களுக்கு குலுக்கி வைக்கவும். தோலில் புளிப்பு கம்மியா இருக்கும். அதனால பாதி உப்பு சேர்க்கவும். நன்கு ஊறி புளிப்பு ஊறுகாய் ரெடி ஆயிடும்... காரம் தேவைப்பட்டால்..
 அடுப்பில் கடாய் சூடுபண்ணி  நல்லெண்ணை ஒருகரண்டி சூடுபண்ணி கடுகு பெருங்காயம் தாளித்து இரண்டு ஸ்பூன் காரப்பொடி சேர்த்து கலந்ததும் அடுப்பை அணைத்து விட்டு ஊறி இருக்கும் புளிப்பு ஊறுகாயில் தேவையானதை சேர்த்து கிளறவும்.. 

Sunday 14 August 2016

peace: அமைதி

peace: அமைதி:  இன்று புதுசாக வலைப்பதிவு தொடங்கி இருக்கிறேன். ஆன்புடன் அனைவரும் வருக வருக என் அழைக்கிறேன்...

Saturday 6 August 2016

அமைதி

 இன்று புதுசாக வலைப்பதிவு தொடங்கி இருக்கிறேன். ஆன்புடன் அனைவரும் வருக வருக என் அழைக்கிறேன்...